தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 நவம்பர், 2014

தங்க மலர்கள்


 (ஆங்கில கவிஞர்களில் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அவருடைய கவிதைகளில் ஒன்றான The Daffodils என்ற கவிதையினை இங்கு தமிழாக்கி தந்திருக்கிறேன் )


செல்லுமிடமறியா மேகமென
பள்ளம் குன்றென திரிந்திருந்தேன்

தங்க மலர் கூட்டமொன்றை
தற்செயலாய் காணப் பெற்றேன்

ஆர்ப்பரிக்கும் கடலோரம் அவை
முடிவிலா வரிசையாய்
அணிவகுத்து நின்றன!

ஒரே பார்வையில்
பல்லாயிரம் மஞ்சள் மலர்கள்
தலையாட்டி நடமிடக் கண்டேன்!

பின் நின்ற அலைகளின்
பேரரவ ஆட்டம்
பூக்களின் நடனம் முன்
பொலிவிழந்து போனது!

காணற்கரிய இக்காட்சியினை கண்டு
களிக்காதவன் கவிஞன் இல்லை

கண்டேன்... கண்டேன்...
கண்டுகொண்டேயிருந்தேன்!

சின்னதாய் ஒரு நினைவு
சித்திரக் காட்சி இதனால்
எனக்கு சேர்வதுதான் என்ன?

அமைதியற்ற  நாட்களில்
வெறுமையுற்ற மன நிலையில்
வீழ்ந்து கிடக்கும் பொழுதெல்லாம்
உள்ளிருக்கும் விழிகளில்
ஒளியூட்டும் இக்காட்சி!

தனிமையுற்ற நாட்களில்
இனிமையதை சேர்க்கும்!

தாவி எழும் உள்ளம்
தங்க மலர்கள் இவற்றோடு
தளிராட்டம் போடும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக