தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 11 ஏப்ரல், 2015

அப்பா குட்டையில் விழுந்தபோது...






(ஆல்பிரெட் நோயிஸ்(Alfred Noyes) இங்கிலாந்து நாட்டு கவிஞர். நாடக ஆசிரியரும் கூட. அவர் இயற்றிய "Daddy fell into the pond" என்ற ஆங்கில நகைச்சுவைக் கவிதையினைத் தமிழில் தழுவி தந்திருக்கிறேன்.)

அத்தனை பேரும் அலுத்துக் கொண்டனர்
அந்தி வானம் சாம்பல் வண்ணமானது
எங்களுக்கு சொல்வதற்கோ செய்வதற்கோ ஏதுமில்லை
சுவையற்ற நாளொன்று சுருங்கிக் கொண்டிருந்தது
இந்நாளில் இதற்கு மேல் ஒன்றுமில்லை
என்றே நினைத்திருந்தோம்
அப்பொழுதுதான்
அப்பா குட்டைக்குள் விழுந்துவிட்டார்!

அத்தனை பேரின் முகமும்
ஆனந்தத்தில் வெளிச்சமானது
எங்கள் வீட்டு டைகர்
சந்தோஷத்தில் துள்ளி குதித்தது
"கேமராவை எடுத்து வாருங்கள் சீக்கிரம்"
அல்லிக் கொடிகளை மெல்ல விலக்கியவாறு
அப்பா தவழ்ந்து வந்து கொண்டிருந்தார்... க்ளிக்

அப்பொழுது
தோட்டக்காரார் திடீரென்று இரு முட்டிகளைத்
தட்டியெழுந்து அசைந்தாடினார்
வாத்துகள் அத்தனையும் முட்டாள்களைப் போல
சத்தம்போட ஆரம்பித்தன
கிழ வாத்தொன்று சிரிப்பது போலிருந்தது
அந்த சத்தம்!
ஓ சந்தோஷத்தைக் காட்டாத
ஜீவன் எதுவும் அங்கில்லை!
அப்பா குட்டையில் விழுந்தபோது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக