தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 ஜூன், 2015

நினைத்ததெல்லாம் நடந்தும்…


                       (வல்லமை இணைய இதழில் இடம்பெற்ற கவிதைகள்)

                           
அந்த காலத்து காதலர்களா
அல்லது
அற்ப சுவைக்காக
ஆண்டவனிடம் சாபம் பெற்ற
ஆதாமும் ஏவாளுமா
இவர்கள்
எதுவும் இல்லாதிருந்தபோது
எல்லாமும் பெற்றிருந்தனர்
எல்லாமும் கிடைத்தபோது
எதையோ இழந்து நிற்கின்றனர்!
ஆடைகள் இல்லாதபோது
இவர்கள்
அவமானம் அடைந்ததில்லை
இப்போது
ஆடை அரைகுறையானதால்
மானம்
மரணமடைந்து கொண்டிருக்கிறது!
மலை மரம் வெட்டவெளி
எங்கு இருந்தாலும்
இவர்களது
அந்தரங்கம் அசிங்கப்பட்டதில்லை
இப்போது
மூடிய அறைகளுக்குள்ளே கூட
முகம் தெரியாத கருவிகளால்
இவர்கள்
முக்காடு நீக்கப் படுகிறது!
ஓ மனித இனமே
உன் ஆறாம் அறிவு
நேர்மையின்றி நடந்ததால்
நினத்ததெல்லாம் நடந்தும்
நீ
நிர்வாணமாய் நிற்கிறாய்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக