தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 17 ஜூன், 2015

இறப்பு வரை

                                                              
                         
                       (வல்லமை இணைய இதழில் வெளியான கவிதை)

அன்று
கடலோரம் நீ
காதலால் கட்டிய கோட்டை
மணல் கோட்டையாகுமென
மனதாலும் நினைக்கவில்லை

உச்சி சிலை
உயிர் காக்கும்
சாமி என்றாய்

மீசை இரண்டும்
நம் ஆசை காக்க
ஆண்டவன் இட்ட
வேலி என்றாய்

சின்ன உருவமெல்லாம்
நாம் சேர்ந்து வாழ
வண்ணக் கவிபாடும்
வானத்து தேவர் என்றாய்

அத்தனையையும் பொய்யாக்கி
பொல்லா நோய்க்குள்
நீ ஏன் 
புதைந்து போனாய்

உன் சிரித்த முகத்தையும்
சிந்திய சொற்களையும்
கைபேசியில் அடைத்து வைத்து
கண்ணீரில் வார்த்தெடுத்து
தினமும்
கனவுகளில் கரைகிறேன்

மண் காணும் இடமெல்லாம்
உன் மணல் கோட்டையும்
இடிந்து போன 
என் மனக் கோட்டையும்
இன்னமும் இதயத்தில் விரிகிறது
இனியும் விரியும்
என் இறப்பு வரை







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக