தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஜூன், 2015

நரகம்



                                 (எழுத்து.காம் இல் வெளியான கவிதை)

தூரத்தில் கேட்கும் ஹாரன் ஒலி 
பதைத்தெழும் பயணிகள் 
பிதுங்கி வழியும் கூட்டத்துடன் 
தள்ளாடி வந்து நிற்கிறது பஸ் 

பலாப்பழ ஈக்களாய் 
மூர்க்கமாய் மொய்க்கும் பயணிகள் 
எதிர்கால பயமின்றி 
ஏணியின் மீது ஏறும் 
இளைஞர் கூட்டம்! 

கூடையை உள்ளே தள்ள 
கோபமாய் கூச்சலிடும் 
மீன்கார மூதாட்டிகள் 

வேண்டுமென்றே இடித்தான் 
யதேச்சையாகத்தான் நடந்தது 
பட்டிமன்றப் பொருளாகி 
பதை பதைக்கும் பெண்கள் 

நெரிசலில் சிக்கிய 
இடுப்பு குழந்தையின் 
அடக்க முடியாத அழுகை 

சில்லரை இல்லை 
கண்டக்டரின் சிடுசிடுப்பு 
கொரிய செல்களின் 
கொலைவெறி கூச்சல் 

டாஸ்மாக் டான்சரின் 
ஆடை அவிழ்ப்பு 
அலங்கோலம் 

நாலே ரூபாயில் 
நரகம் பார்க்க வேண்டுமா 
எங்கள் காலை நேர 
நகரப் பேருந்தில் 
ஒரே ஒரு முறை 
பயணம் செய்யுங்கள்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக