தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 ஜூன், 2015

நானும் பழகிக் கொள்ளுகிறேன்


                     (வல்லமை இணைய இதழில் வெளியான கவிதை)


நீர்த்தேடி நித்தமும்
நீண்ட குழாயின்
குமிழ் திறந்து பார்க்கிறேன்
உஸ்ஸென்று சத்தம் மட்டுமே
உள்ளிருந்து வருவது ஏன்
உழைத்து வியர்த்தும்
உயரம் அடையாத 
உழைப்பாளியின்
உஷ்ண மூச்சா
அன்னைத் தமிழிருக்க
ஆங்கில மோகங்கொண்டலையும்
உம்மவரைப் பார்த்து
உலகம் விடும்
ஏளன இழி மூச்சா
ஊழல் பெருச்சாளிகள்
நாட்டையே நாசம் செய்ய
ஏதும் செய்ய இயலா
ஏழைகளின் ஏக்கப் பெருமூச்சா
ஆறு குளம்  ஏரியென 
அத்தனையையும் கட்டிடங்களாக்கி
வனங்களோடு வளங்களையும்
இரக்கமின்றி அழித்ததால்
இயற்கை விடும் எரிச்சல் மூச்சா
பாய்ந்து வரும் ஆறுகளில்
பக்கத்து மாநிலங்கள்
அடுக்கடுக்காய் அணைகள் கட்ட
அழிந்து வரும் உம்
வாழ்வாதரத்தின் இறுதி மூச்சா
என்னவென்று நீங்களே
உடன் வந்து பாருங்கள்
அப்படியே
பத்து ரூபாய் தண்ணீர் பாட்டிலிருந்தால்
எனக்கொன்று கொடுங்கள்
நானும் பழகிக் கொள்ளுகிறேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக