தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 நவம்பர், 2010

மாண்டுவிடாதிர்கள்

என்னருமை கவிஞர்களே
உங்கள்
வார்த்தை கிடைக்காமல்
வானத்து நிலவு
வாடிவிடப்போவதில்லை

கன்னியரின்
கன்னங்களில்
முத்தமிட
காதலர்கள் இருக்கிறார்கள்
உங்கள்
கவிதைத் தேவையில்லை

நீங்கள்
ஆகாயத்திலிருந்து
அழகை ரசித்ததுப் போதும்
யதார்த்தத்திற்கு இறங்கி வாருங்கள்

இல்லையேல்
மரபுகளில் அமுங்கி
நீங்கள் மாண்டுவிடக்கூடும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக