சாராயக் கடைகள் திறந்தாயிற்று -இனி
சந்தோஷத்திற்கு குறைவில்லை
ஆராய்ந்து அரசெடுத்த முடிவால்
ஆகாயத்தில் இருக்கும் விலைவாசி மட்டும்
அங்கேயே இருக்கட்டும் - இனி
மலிவு விலையில் மகிழ்ச்சி எங்கும் பெருகட்டும்
வேலையின்றி இளைஞர்கள்
வீட்டில் இருக்கத் தேவையில்லை
காலை எழுந்தவுடன் அவர்கள்
சாலை ஓர சாரயகடைக்குப் போகலாம்
பாஸ்போர்ட் எடுத்து
பணமழித்து அவர்கள்
பரதேசம் செல்லத்தேவை இல்லை
வெறும் சில்லரையிலேயே இனி
இங்கு சிவலோகம் காணலாம்
நல்வாழ்வை நோக்கி இனி
நடை போடும் நாடு
தாய்த் திருநாடாம் இந்தியாவில்
தனித்திருந்த தமிழகமும் இனி
தேசிய கண்ணோட்டத்தில்
திவ்வியமாய் திளைத்திருக்கும்
சாராய தேவதையின் சாம்ராஜ்யத்தில் இனி
சாலைகள் கூட நேராகும்
சாவுபுரி நோக்கிச் செல்லுகின்ற
சாலைகள் கூட நேராகும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக