தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 14 நவம்பர், 2010

இயற்கை எழில்

வண்டுவந்து மலர் தேடித் தேன் எடுக்கும்- சிறு
நண்டு வந்து கரையேறி நடமாடும் -அதனை
கண்டுவிட்டு மீன்கள் எல்லாம் தாளம் போடும் -பெரும்
கடல் அலையும் உடன் சேர்ந்துப் பாட்டிசைக்கும் -வண்ண
குவளைஎல்லாம் குதுகலத்தால் உடல் சிலிர்க்கும் -சின்ன
பவளமணி அழகெங்கும் பறந்து கிடக்கும் -அந்த
பட்டாம்பூச்சி அழகெதிரேஎதுதான் நிற்கும்?
இன்பமென்றால் இதயமெலாம் அதில் தத்தளிக்கும் -நல்ல
இசையென்றால் தமிழ்தானே அங்கு எதிரொலிக்கும் -எழிலான
இயற்கைதானே என்றென்றும் என்னை காதலிக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக