தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 நவம்பர், 2010

காவேரிக்கு ஒரு கடிதம்

அன்புள்ள அன்னைக் காவேரியே
புகுந்தவீட்டில் நீ இருந்த பொழுது
உன்னை புகழ்ந்தப் புலவர்கள் எத்தனைபேர்

நாத்திவீடென்று ஹேமாவதியிலேயே நீ
தங்கிவிடுவது நியாயம் ஆகுமா

வேட்டகத்துவீடாம் மேட்டுருக்கு
ஆண்டுக்கு ஒருமுறையாவது
நீ அவசியம் வரவேண்டும்

உன் கருணை முகம் பார்த்தபின்தான்
எங்கள் கழனியில் நெல் காய்க்கக் கூடும்

இப்படிக்கு
நீ அங்கேயே தங்கிவிட்டதால்
அல்லலுறும் உன்
அன்புப் பிள்ளைகள்
ஆறரைகோடி தமிழர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக