தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 நவம்பர், 2010

இரவுப் படைகள்



(Mathew Arnold எழுதிய Dover Beach
என்ற ஆங்கில கவிதையின் தழுவல்)

தெளிவான கடல் அலைகள் மிளிரத்
தென்றல் வந்து அவைகளைத் தழுவ
நிலவொளி கடல் எங்கும் பரவ
இனிமை இது ! இந்த இரவு!
ஐயைந்து மைல்கள் தாண்டி
அழகுடனே மிளிரும் பிரெஞ்சு கரையும்
அன்பே சாளரத்தின் அருகில் நின்று
அலைகள் சாற்றுவதை கேண்மின் சற்றே
சிப்பிகளை கரை சேர்க்கின்ற அலைகள்
செப்புகின்ற மொழியினை கேட்டாயோ ? அதில்
தொக்கி நிற்கும் சோகத்தை உணராயோ?
மானிடத்தின் அழிவை எண்ணி வருந்தாயோ
மத்திய கடலின் ஓரம் நின்று
சோபோக்ளியஸ் கேட்டான் அன்று
ஓடிவரும் அலைகளின் ஓலத்திலே
மானிடத்தின் அவலத்தை கேட்டான் நின்று
நம்பிக்கை கடல் நாற்புறமும் சூழ்ந்து
தெம்பினை தந்தது முன்னொரு நாள்
தேயும் நாணயம் உலகில் கண்டு
கடலும் விளக்கும் அலைகள் கொண்டு
துன்பமே துணையாகிப் போன இவ்வுலகத்தில்
இன்பத்தை கண்டவன் எவனுமில்லை
அன்பைச் செலுத்தும் மனிதன் இல்லை
ஆறுதல் கூறிட யாருமே இல்லை
அன்பும் பண்பும் எங்கோ சென்று
பகலின் கனவாய் மாறிற்றே இன்று
இரவில் செல்லும் படை எனவே
இனம் தெரியாமல் மோதுகிறோம்
இறைவன் ஒருவனை மறந்து விட்டோம்
இதனால் அன்றோ வருந்துகிறோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக