தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 14 நவம்பர், 2010

செம்பனிப் பூவே

அரும்பி நிற்கும் சிறுமலரே செம்பனிப் பூவே -உன்
அருகிருந்து ரசிப்பவர் யார் செம்பனிப் பூவே !
முகமின்று சிவந்ததேன் செம்பனிப் பூவே -உன்
அகம் கவர்ந்த கதிரவனாலோ செம்பனிப் பூவே !
இளமங்கை அழகென்பார் செம்பனிப் பூவே -உன்
அழகெதிரே அவரெங்கே செம்பனிப் பூவே!
பருவ இதழ் தோற்றிடுமே செம்பனிப் பூவே -உன்
பட்டு இதழ் முன்னாலே செம்பனிப் பூவே !
மங்கையரை வென்றுவிட்டாய் செம்பனிப் பூவே -என்
மனமிதை கவர்ந்து விட்டாய் செம்பனிப் பூவே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக