தமிழ் வாழ்க

தமிழ் வாழ்க

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 14 நவம்பர், 2010

குழந்தை என்றால்

வாழையோடு வாழ்ந்துயரும் ஈகை -தென்றல்
மாலையோடு மகிழ்ந்துலவும் மலர் -கூவும்
குயிலோடு பறந்து வரும் பாடல் -ஆடும்
மயிலோடு சென்றுரையும் அழகு!

கோர்வையால் உருவாகும் மாலை ஒன்று -ஒரு
பார்வையால் மலர்ந்து நிற்கும் அன்பு -பருவப்
போர்வையால் படர்ந்து வளரும் காதல் -இன்பச்
சேர்க்கையால் சிரித்துலவும் மழலை !

வீடெலாம் நிறைவாகும் பெண்மை ஒன்றால் -உயர்
நாடொன்று உருவாகும் வீரத்தின் விளைவால் -புலவர்
பாவெல்லாம் கருவாகும் தமிழின் துணையால் -கவிதைக்
கதிரெல்லாம் பயிராகும் குழந்தை என்றால் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக